Friday, 11 July 2014

சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்
அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!மேலும் தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது.
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
நாம் எண்ணிப்பார்க்காத 20 பொதுவான உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றில் எவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை எனப் பாருங்கள்.
பிடித்திருந்தால் இந்த தகவலை share செய்யுங்கள்.
1. நீங்கள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானால் உங்களுடைய உடல் 28,000 டிகிரி சென்டிகிரேட் வரை சூடாகிறது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்ப அளவு.
2. இந்த உலகிலிருந்த அனைத்து டைனோசர்களும் அழிக்கப்பட்டுவிட்டபோதிலும் தேரை அல்லது பல்லியினுடைய இனம் அழிக்கப்படவில்லை. முதலைகள், ஆமைகள் போன்றவை பிழைத்துக்கொண்டதற்கான காரணமும் யாருக்கும் தெரியாது.
3. ஹவாய் நாட்டவருடைய அகரவரிசையில் 12 எழுத்துக்கள் மாத்திரமே உள்ளன.
4. நீங்கள் ஒவ்வொரு முறை தும்முகின்றபோதும் உங்கள் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்துகின்றது.
5. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது.
6. ஹம்மிங் எனப்படும் பறவை மட்டுமே பின்புறமாகப் பறக்கக்கூடியது.
7. நெருப்புக் கோழியினுடைய கண் அதனுடைய மூளையைவிடப் பெரியது.
8. கரப்பான் பூச்சிகள் தலையில்லாமல் 9 நாட்கள் உயிர்வாழக் கூடியவை.
9. செந்நாரைக்கு அதனுடைய தலை தலைகீழாக இருக்கும்போது மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.
10. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னமே தீமூட்டி (லைட்டர்) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
11. வலது கைப்பழக்கமுடைய நபர்களை விட இடது கைப் பழக்கமுடைய நபர்கள் 7 ஆண்டுகள் குறைவான வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.
12. அதிவேக கெமராக்களைக் கொண்டு விஞ்ஞானிகள் மழை நீர் கண்ணீர் வடிவத்தில் இல்லை அது ஹெம்பர்கர் பண்னைப் போன்றது என கண்டுபிடித்துள்ளனர்.
13. 1985 மார்ச் மாதம் 15ஆம் திகதி தான் முதலாவது இன்டர்நெட் டொமைன் Symbolics.comஎன்ற
பெயரில் பதிவு செய்யப்பட்டது.
14. 1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிராகம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த முதல் மாதத்தில் 6 தொலைபேசிகள் மட்டுமே விற்கப்பட்டன.
15. 7.5 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த டொமைனாக தற்போது Business.com உள்ளது.
16. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தால் 1907ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மஞ்சள் நிறம் தான் மிக எளிதாக அடையாளப்படக்கூடியது என கண்டுபிடித்தனர்.
17. நியூயார்க் டைம்ஸ் இன் ஞாயிறு வெளியீடு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 63,000 மரங்கள் தேவைப்படுகிறது.
18. இந்திய இரயில்வேத் துறைதான் உலகின் மிக அதிக எண்ணிக்கையுடைய தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 1.6 மில்லியன் பேர் தொழில்புரிகின்றனர்.
19. Happy Birthday பாடலின் சொந்தக்காரர் வார்னர் செப்பல். ஒவ்வொராண்டும் 1 மில்லியன் டொலர் வரை இப்பாடலை வர்த்தகப் பாவனைக்குப் பயன்படுத்துவதெற்கென வழங்கப்படுகிறது.
20. பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் நிறக்குருடு தான் பிறக்கின்றன.


உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்! ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். ...